Friday, July 18, 2025

அப்துல்கலாம் மொழிகள்


 1. சென்றதை மறப்பது; நிகழ்காலத்தினை நேர்வழியில் செலுத்துவது; வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது; இந்த மூன்று செயல்களும் மகிழ்வான வாழ்வுக்குரியவை.

2 உன்.வாழ்க்கையில் முடிவுகளைப் பிறரிடம் விடாதே.முடிவு எப்போதும் உன்னுடயதாக இருக்கட்டும்.

3.எண்ணத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் எண்ணங்கள் தான் சொற்கள் ஆகின்றன. சொல்லில் கவனமாக இருங்கள். ஏனெனில் சொற்கள் தான் செயல்களாகின்றன. செயலில் கவனமாக இருங்கள். ஏனெனில் செயல்கள் தான் பழக்கங்கள் ஆகின்றன. பழக்கத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் பழக்கங்கள் தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் ஒழுக்கம் தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது.

4. உன் இதயம் மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசம் வரும்.

5. எங்கே விழுந்தாய் என்று பார்க்காதே; .எங்கே வழுக்கினாய் என்று பார்.

ஆதாரம்:

தோழர் செல்வா நினைவாக....( நினைவுமலர்) 31.10.2012.

Tuesday, February 11, 2025

சுவாமி சிவானந்தரின் அருளுரைகள்

 எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆராத்தி காண்பிக்கப்பட்டன, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு மறை நூல்கள் வாசிக்கப் பட்டன போன்ற செயல்களைக் கொண்டு மனிதர்களைத் தெய்வீக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை.

அவரவர் உள்ளத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தும்; அவர்கள் எத்தகைய வார்த்தைகளைத் தங்களுடய அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தும்; அவர்கள் தங்களுடய வாழ்வை யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் வித்தித்திருக்கிறானோ அவர்களுடன் அவர்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலைப் பொறுத்துமே தெய்வீக அளவுகோல்கள் மனிதர்களை மதிப்பிடுகின்றன.

நல்ல ஆரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இவை இரண்டும் இருப்பினும் மக்களில் பலரும் தொடர்ந்தும் மன அமைதியின்றி அல்லற்படுகின்றனர். நம்முடய தொல்லைகள் பெரும்பாலும் நாமாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால் அவைகள் பெரும்பாலும் தவிர்க்கப் படக் கூடியதே ஆகும்.

நாம் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகின்றோம். மற்றவர்கள் செய்வது தவறானதாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பொருட்டு நாம் அல்லல் படவேண்டிய அவசியமில்லை. யாரையும் எதையும் குறைகூற வேண்டிய அவசியம் இல்லை. பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படி தான்  நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள் இயங்கும் இறைவன் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார். 

மன அமைதியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாம் நம்முடய சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகும்.


நன்றி: வேதாந்திரியம்; ஆண்மீக மாத இதழ்

ஜூலை 2018 பக்:14.

( இந்தச் சமய சஞ்சிகைகளைப்  படிக்குமாறு கரிசனையோடு தாயகத்தில் இருந்து நண்பி மூலமாகக் கொடுத்தனுப்பி வைத்த சேவையர் அங்கிளுக்கும் நன்றி )

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!!


Monday, August 5, 2024

ஒரு கேள்வி ஒரு பதில்

 


மகள் தன் தந்தையிடம் எனக்கு ஒரே ஒரு அறிவுரைதான் உங்களால் சொல்ல முடியுமென்றால் அது என்னவாக இருக்கும் அப்பா அன்று கேட்டாள்.

அதற்கு தகப்பன்,’ மகளே! ஒரு போதும் யாரும் உன்னைப் பற்றிக் கடவுளிடம் முறைப்பாடு சொல்லாத மாதிரி நடந்து கொள்’ என்று கூறினார்.

( சமூக வலைத்தளத்தில் படித்தது.)

Friday, May 31, 2024

பேச்சும் தீர்வும்

 
பேசித் தீருங்கள்

பேசியே வளர்க்காதீர்கள்

உரியவரிடம் சொல்லுங்கள்

ஊரெல்லாம் சொல்லாதீர்கள்

சங்கடமாய் இருந்தாலும்

சத்தியமே பேசுங்கள்

எதிர்தரப்பும் பேசட்டும்

என்னெவென்று கேளுங்கள்

சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்

யாரோடும் பகையில்லாமல்

புன்னகைத்து வாழுங்கள்

ஏனென்றால்,

வாழ்க்கை குறுகியதும் மிகவும் அழகானதும் ஆகும்.

2021.12.21

-1.5.2024 அன்று இறைபதம் எய்திய என் தாயாரின் டையறிக் குறிப்பில் இருந்து. -

Wednesday, April 17, 2024

ஜீவாத்மா; அந்தராத்மா; பரமாத்மா




ஜீவாத்மா, அந்தராத்மா, பரமாத்மா விளக்கம் தேவை?

தான், எனது என்று சுய பற்றுக் கொண்டு, இல்லற சுகத்தில் ஈடுபட்டு, உலக விவகாரங்களில் மூழ்கி இருப்பவன் ஜீவாத்மா.

தாமரை இலைத் தண்ணீரைப் போன்று, இல்லற தர்மத்திலும், சுய கர்மத்திலும், பொருந்தியும் பொருந்தாமலும் வாழ்க்கை நடத்துபவன் அந்தராத்மா.

உலக விவகாரங்கள் அனைத்துக்கும் சூரியன் சாட்சியாக விளங்கவது போன்று, ஜீவாத்மா, அந்தராத்மாக்களின் விவகாரங்கள் அனைத்துக்கும் சாட்சியாக விளங்குபவன் பரமாத்மா.

- விடை தேடும் வினாக்கள் - தமிழருவி மணியன், பக்: 141

Thursday, April 4, 2024

வெற்றியின் இரகசியம் - செயல் நேர்த்தி

 ”உனது வாழ்வின் பணி எதுவாயினும் அதை மிக நன்றாகச் செய். உயிருடன் இருப்பவர், இறந்தவர், இதுவரை பிறக்காதவர் எவராயினும், அப்பணியை இதை விடச் சிறப்பாகச் செதிராத அளவுக்கு உன் பணியை நீ செய்ய வேண்டும்.

 தெருவைக் கூட்டும் பணி உனக்கு வாய்த்தாலும், மைக்கல் ஏஞ்சலோ ஓவியம் வரைந்தது போல், ஸேக்ஷ்பியர் கவிதை தீட்டியதிப் போல், பித்தோவன் இசையை உருவாக்கியதைப் போல், மிகச் சிறப்பாக நீ தெருவைக் கூட்ட வேண்டும்.

அந்த இடத்தைக் கடப்பவர் சற்று நின்று,’ஆஹா இந்தத் தெருவை மிகச் சுத்தமாகப் பெருக்கிய ஒரு மிகச் சிறந்த பணியாளன் இங்கே வாழ்ந்திருக்கிறான் என்று பெருமைபொங்கச் சொல்லும் அளவுக்கு நீ சுத்தமாகக் கூட்ட வேண்டும்” என்று சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங்.

எதைச் செய்தாலும் அதை முழு நிறைவுடன் ( Perfection) செய்வது தான் படைப்பின் இரகசியம்..

நன்றி: ’விடை தேடும் வினாக்கள்’ - தமிழருவி மணியன்.

பக்:59.

Thursday, September 28, 2023

நினைப்பும் நிகழ்வும்

 


                                                          Where focus goes Energy flows

Wednesday, January 11, 2023

பொன்மொழிகள்

 உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்.

உங்கள் பின்னால் பேசுபவரைக் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் வாழ்வது அல்லாவுக்காகத் தான். அடுத்தவருக்காக அல்ல!  - நபிகள் -

வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் எப்படி வாழ்வது என்பதே.

பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகம் தங்கி விடாமல் பார்த்துக் கொள்.

உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்.

ஏளனம் என்பது கீழ் மக்களின் மனங்களில் ஏற்படும் நச்சுப் புகை.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பாகும்.

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்தில் இருந்து மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.

-படித்ததில் பிடித்தது - 

Monday, May 2, 2022

உங்களைக் கேளுங்கள்

 


உங்களிடம் கேளுங்கள்; நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?

                                              - Dr.அப்துல்கலாம்.-

Friday, October 8, 2021

இரு பலவீனங்கள்


 நீங்கள் பலவீனமானவர் என்பதற்கு இரண்டு அடையாளங்கள் உண்டு.

1. பேசவேண்டிய நேரத்தில் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2. வாயை மூடிக் கொண்டிருக்கவேண்டிய நேரத்தில் பேசுவது.

                                                         - பாரசீகப் பழமொழி - 

Sunday, September 5, 2021

எண்ணங்கள்

 



What we think, we become. – Buddha

நாம் எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம். – புத்தர் -


Friday, July 16, 2021

சந்தோஷம் என்பது.....


 'உங்கள் கணவர் உங்களைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்கிறாரா?’ - சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

அருகில் இருந்த கணவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். காரணம் மனைவி அவரிடம் எந்த விதமான புகார்களும் சொன்னதில்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.

ஆனால், அந்த மனைவி தெளிவாக, ’ இல்லை, கணவர் என்னைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. என்னைச் சந்தோஷப் படுத்தியதுமில்லை; ஆனால் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது அல்ல; அது என்னைச் சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப் பட்ட விஷயம்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பதென்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்னென்ன தருணங்களில் தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால் நான் பெரும் பிரச்சினையில் இருக்கிறேன் என்று பொருள்.

நம்மைச் சுற்ரியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.... அது ஒரு நீண்ட பட்டியல்.

‘என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பதென்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ குறைவாக இருந்தாலோ சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ பணக்காறியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.

‘திருமணத்திற்கு முன்னும் நான் சந்தோஷமாக இருந்தேன். பின்னும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நல்ல அபிப்பிராயம் இருப்பதால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையை நான் விரும்பக் காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமாக இருப்பதால் அல்ல; நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்குப் பொறுப்பு.

இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும் போது, என்னைச் சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் இருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால் தான் எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது’ என்றார்.

நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு உரியது. அது மழை வெய்யிலிலோ, உடல்நலமின்மையிலோ, பணத்திலோ மற்றவரிலோ தங்கி இல்லை.

.நம்  சந்தோஷம் நம் வசமே உள்ளது.

( சிட்னியில் கொரோனா பேரிடர் அதிகரித்துக் கொண்டும் போகும் இத் தறுவாயில்; எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கப் பணிக்கப் பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் வட்ஸப் பில் வந்த இந்தப்பதிவை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

Stay home.  Be safe!

Saturday, July 3, 2021

சில பொன் மொழிகள்

 


மிகச் சிறிய விடயங்களை ஆழமாக அறிந்து கொள்பவனே நிபுணன் ஆகிறான்.


நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் செளகரிகங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.


தன் பிள்ளைகளுக்கு பிறர் மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுப்பதன் மூலமாக தாய் தன் கடமையைச் செய்து முடிக்கிறாள்.


ஒரு மனிதனுடய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடய எண்ணங்களையும் செயல்களையும் அவதானிதால் போதுமானது. 


ஒரு நூலகத்தையும் தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவனுக்கு வேறு எதுவும் தேவை இல்லை.


கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப் பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி நன்றாகக் குளித்து விட்டு வா.

whatsapp இல் வந்தவை. (4.7.21.)

Monday, August 31, 2020

தண்ணீரின் போதனை

 


வட்ஸப் இல் வந்த இந்த செய்தி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் கடின சூழல்களுக்கு; சில சந்தர்ப்பங்களில் கடினமான குண இயல்புகளை கொண்ட மனிதர்களை எதிர் கொள்ளுகின்ற போது அவற்றை இலகுவாகக் கடந்து செல்ல வழிகாட்டுகிறதல்லவா?

சில வேளைகளில் யாரோ முகம் தெரியாத ஒருவர் சிந்திவிட்டுப் போகும் ஒரு புன்னகை போல, சில காலை வணக்கச் செய்திகளும் மனிதர்களை; சந்தர்ப்பங்களை; எதிர்பாரா சில நிகழ்வுகளை எதிர் கொள்ள  திராணிகளை தந்து போகின்றன.

ஏதோ ஒரு விதமாக இங்கு வந்து சேரும் உங்களுக்கும் அது சில வேளைகளில் காயங்களுக்கு மருந்தாகலாம் அன்றேல் நோவுக்கு ஒத்தடம் ஆகலாம்.

நாளையும் சூரியன் உதிக்கும்!

Monday, June 8, 2020

திருப்தி



Happiness is a inner joy... It is a delicate balance between 'what i want & what i have'......

Tuesday, December 10, 2019

திணை விதைத்தவன் திணை அறுப்பான்


ஓர் உண்மைக் கதை!

ஸ்கொட்லாண்ட் நாட்டில் ஃளெமிங் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் அவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உதவி கோரி ஒரு குரல் அருகில் இருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

ஃளெமிங் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு, குரல் கேட்ட திசை நோக்கி ஓடினார். அங்கே ஒரு சிறுவன் புதை குழியில் சிக்குண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நல்லவேளையாக ஃளெமிங் அச்சிறுவனைக் காப்பாற்றினார்.

அடுத்தநாள், நேர்த்தியாக உடையணிந்த ஒரு பிரபு வண்டியில் இருந்து இறங்கி வந்து ஃளெமிங்கிடம் நேற்று அவர் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தான் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும், மகனின் உயிரைக் காப்பாற்றியதனால் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு ஃபிளெமிங் எதையும் வாங்கிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அப்போது ஃளெமிங்கின் மகன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான்.

அவன் உங்கள் மகனா என்று கேட்டார் பிரபு.

ஆம் என்று பெருமையுடன் கூறினார் ஃளெமிங்.

அப்படியானால் சரி. நாம் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். என் மகனுக்குக் கிடைக்கும் அதே மிகச் சிறந்த கல்வியை உங்கள் மகனுக்கும் அளிக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாம் இருவரும் பெருமைப்படும் படியாக அவன் இருப்பான் என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. பிரபு சொன்னது மாத்திரமன்றி அதைச் செய்தும் காட்டினார். விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளியில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் முழுவதும் பயன் படும் பென்சிலின்  மருந்தைக் கண்டுபிடித்த சேர். அலெக்ஸ்ஸாண்டர் ஃபிளெமிங் ஆனார்.

பல வருடங்கள் கழிந்த பின் பிரபுவின் மகன் நிமோனியாவால் பாதிக்கப் பட்ட போது இந்த பென்சிலின் மருந்தே அவரைக் காப்பாற்றியது.

அந்தப் பிரபுவின் பெயர் லோர்ட். ரண்டோல்ப். சேர்ச்சில்.

அவரது மகன் சேர். வின்ஸ்டண்ட் .சேர்ச்சில்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

நம்புங்கள்; நல்லது செய்பவனுக்கு உடனேயோ பின்னரோ நல்லதே நடக்கும்.

பணம் தேவை இல்லை என்பது போல் வேலை செய்.
யாரும் உன்னைப் புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.
யாரும் உன்னைப் பார்க்கவில்லை என்பது போல் நடனமாடு. 
யாரும் உன்னைக் கேட்கவில்லை எனபது போல் பாட்டுப்பாடு. 
சொர்க்கத்தில் இருப்பது போல் பூமியில் வாழ்!

இறுதியாக ஐரிஷ் வாழ்த்து உங்கள் எல்லோருக்குமாக....

* உங்கள் கைகளில் செய்வதற்கு எப்போதும் ஒரு வேலை இருக்கட்டும்.
* உங்கள் பணப்பையில் எப்போதும் ஓரிரு காசுகள் புழங்கட்டும்.
* உங்கள் ஜன்னலோரம் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்.
* ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்.
* நண்பன் ஒருவனின் கைகள் எப்போதும் உங்களுக்கருகில் இருக்கட்டும்.
* இயற்கையும் இறைவனும் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். 

Friday, November 29, 2019

பெண் என்பவள்....


மனைவியர் இளய வயதில் கணவனுக்குத் தலைவியாகவும், மத்திய வயதில் துணைவர்களாகவும், முதிய வயதில் செவிலியராகவும் விளங்குகின்றார்கள்.
                                  - பிரான்சிஸ். பேகன். -

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ்வாறே மனிதர்கள் அமைகிறார்கள்.
                                  - எமர்சன் -

‘புதுமலரல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்ப தொன்றே!
                             - பாரதி தாசன், குடும்பவிளக்கு, முதியோர்காதல்.-