ஜீவாத்மா, அந்தராத்மா, பரமாத்மா விளக்கம் தேவை?
தான், எனது என்று சுய பற்றுக் கொண்டு, இல்லற சுகத்தில் ஈடுபட்டு, உலக விவகாரங்களில் மூழ்கி இருப்பவன் ஜீவாத்மா.
தாமரை இலைத் தண்ணீரைப் போன்று, இல்லற தர்மத்திலும், சுய கர்மத்திலும், பொருந்தியும் பொருந்தாமலும் வாழ்க்கை நடத்துபவன் அந்தராத்மா.
உலக விவகாரங்கள் அனைத்துக்கும் சூரியன் சாட்சியாக விளங்கவது போன்று, ஜீவாத்மா, அந்தராத்மாக்களின் விவகாரங்கள் அனைத்துக்கும் சாட்சியாக விளங்குபவன் பரமாத்மா.
- விடை தேடும் வினாக்கள் - தமிழருவி மணியன், பக்: 141