Friday, July 18, 2025

அப்துல்கலாம் மொழிகள்


 1. சென்றதை மறப்பது; நிகழ்காலத்தினை நேர்வழியில் செலுத்துவது; வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது; இந்த மூன்று செயல்களும் மகிழ்வான வாழ்வுக்குரியவை.

2 உன்.வாழ்க்கையில் முடிவுகளைப் பிறரிடம் விடாதே.முடிவு எப்போதும் உன்னுடயதாக இருக்கட்டும்.

3.எண்ணத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் எண்ணங்கள் தான் சொற்கள் ஆகின்றன. சொல்லில் கவனமாக இருங்கள். ஏனெனில் சொற்கள் தான் செயல்களாகின்றன. செயலில் கவனமாக இருங்கள். ஏனெனில் செயல்கள் தான் பழக்கங்கள் ஆகின்றன. பழக்கத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் பழக்கங்கள் தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் ஒழுக்கம் தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது.

4. உன் இதயம் மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசம் வரும்.

5. எங்கே விழுந்தாய் என்று பார்க்காதே; .எங்கே வழுக்கினாய் என்று பார்.

ஆதாரம்:

தோழர் செல்வா நினைவாக....( நினைவுமலர்) 31.10.2012.

No comments: