உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்.
உங்கள் பின்னால் பேசுபவரைக் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் வாழ்வது அல்லாவுக்காகத் தான். அடுத்தவருக்காக அல்ல! - நபிகள் -
வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் எப்படி வாழ்வது என்பதே.
பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகம் தங்கி விடாமல் பார்த்துக் கொள்.
உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்.
ஏளனம் என்பது கீழ் மக்களின் மனங்களில் ஏற்படும் நச்சுப் புகை.
நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பாகும்.
தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்தில் இருந்து மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.
-படித்ததில் பிடித்தது -