Monday, April 27, 2015

நம்பிக்கை



ஒன்றே எனின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
 அன்றே எனின் அன்றேயாம், ஆமே எனின் ஆமேயாம்
 இன்றே எனின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
 நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

( கம்ப இராமாயணம்; யுத்த காண்டம்; கடவுள் வாழ்த்துப் பாடல்.)

 இறைவன் ஒன்று என்றால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றால் இல்லைதான்; உண்டு என்றால் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நலமுடயதாக ஆகி விடும்!

(தெய்வம் என்றால் அது தெய்வம் சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்றார் பின்னால் வந்த கண்ணதாசன்.)

கம்பனுக்கும் முன்பே நம்மாழ்வார் இப்படிக்கூறி இருக்கிறார்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே

நம்பிக்கையே மனித வாழ்வு!

Think positive!