Friday, February 13, 2015

பண்பு நலம்



ஒவ்வொருவரையும் இன் முகத்தோடு அனுகுங்கள். - அவர்கள் முரடர்களாக இருந்த போதிலும்.
காரணம் அவர்கள் பண்பானவர்கள் என்பதால் அல்ல. மாறாக, நீங்கள் பண்பானவர் என்பதால்.

Saturday, February 7, 2015

காலத்தை வெல்லும் நிஜம்



முல்லா வாழ்ந்து வந்த தேசத்தின் மன்னருக்கு ஒரு கண் மட்டும் பார்வை தெரியும். ஒரு கை மணிக்கட்டும் அவருக்குக் கிடையாது. ஒரு காலும் முடமானவர். இருந்தும், சாமர்கண்ட் நகரத்தில் மயக்கும் அரண்மனைகளையும்; விண்ணை முட்டும் மாட மாளிகைகளையும்; அழகு மிகு கனவுத் தோட்டங்களையும்; ஆடம்பரமான வாசஸ்தலங்களையும் அம் மன்னர் ஸ்தாபித்தார்.

அம் மன்னருக்கு வரும் தலைமுறையினர் எல்லோரும் தான் யாரென்று தெரிந்து கொள்வதற்கு தனது சித்திரம் ஒன்றைத் தீட்டி வைக்க வேண்டுமென்ற தணியாத தாகம் இருந்தது.

காலத்தை வென்று தனது பிரதாபங்களை உலகத்துக்குத் தெரிவிக்கும் சித்திரம் ஒன்றை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மன்னனின் மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

அதற்காகச் சீன தேசத்தில் இருந்து ஓவியர் வரவழைக்கப்பட்டார். அவ் ஓவியர் முப்பது நாட்கள் அரும் பாடுபட்டு தனது திறமை எல்லாம் ஒன்றுகூட்டி மன்னரின் அச்சு அசலான பிம்பத்தைத் திரைச்சீலையில் வரைந்திருந்தார்.

மன்னரே உயிருடன் திரைச்சீலையில் இருந்து நம்மைப் பார்க்கிறாரோ என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவாறு அமைந்திருந்தது அவ் ஓவியம்.

முப்பத்து ஓராம் நாள் திரை விலக்கப்பட்டது.

மன்னர் அச் சித்திரத்தை உற்றுப் பார்த்தார்.

’படம் நிஜமாய் இருக்கிறது; ஆனால் அவலட்சணமாய் இருக்கிறது. அந்தப் புழுவை வெளியே தூக்கிப் போட்டு அவன் தலையைக் கொய்து நான் காலூன்றுவதற்கு திரும்ப எடுத்து வாருங்கள்’ என்றார் அரசர்.

அடுத்த ஓவியர் வரவழைக்கப்பட்டார்.

அவரும் கடும் முயற்சியுடன் படம் வரைந்து நடுங்கும் கரங்களுடன் அதை அரசர் முன் சமர்ப்பித்தார்.

அரசர் அச் சித்திரத்தை வியப்புடன் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு பின்னர் தனது தீர்மானத்தைச் சொன்னார்.

‘இந்தப் பிம்பம் அழகாய் இருக்கிறது. ஆனால் நிஜமாய் இல்லை. வெளியே அவனைச் சிரச்சேதம் செய்து தலையை அவன் காலடியில் போடுங்கள் ‘

மூன்றாவது முறை யாரும் தைரியமாக படம் வரைய முன் வரவில்லை.

வழக்கம் போல முல்லா அரசவைக்கு அழைக்கப்பட்டார். வாளுக்கு இரையாகப்போகிறாரா அல்லது தூரிகையைத் தொடப்போகிறாரா, இதில் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு முல்லாவுக்கு ஆணை இடப்பட்டது.

முல்லா தூரிகையைத் தேர்ந்தெடுத்தார். வெளியே பெயர் தெரியாத சில சித்திரக்காரர்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் உதவியுடன் படத்தை வரைந்து முடித்துக் கொண்டார் முல்லா.

படத்திறப்பு விழாவை மேலும் தாமதப்படுத்த முடியாத கட்டம் நெருங்கியது.

அரசர் தன் கரங்களால் படச் சீலையை விலக்கினார்.

அரசர் ஓவியத்தைப் பார்த்தார். பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். புருவத்தை இறுக்கினார். தலையைச் சொறிந்தார். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். வானத்தைப் பார்த்தார். நீண்ட நேரம் ஜூக்காவைப் புகைத்தார். பின் ராஜகளை பொருந்திய தனது முகத்தில் புன்னகையைப் படரவிட்டார்.

’ரொம்ப மோசமில்லை. நான் அழகாய் தோன்றவில்லை. ஆனாலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நான் முடமென்று யார் கவனித்துச் சொல்லி விட முடியும்?’

நான் அம்பெய்தும் காட்சியை இக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது எனக்கு ஒருகண் பார்வை மட்டும் இருப்பதையோ அல்லது என் மணிக்கட்டு ஊனத்தையோ யாரும் கவனிக்க முடியாது.

இந்த வேடிக்கையான ஓவியக்காரரை தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்.

’அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது’ என்று சந்தோஷமாகக் கூத்தாடினார் அரசர்.

நன்றி: ‘என்றார் முல்லா’முல்லா நஸ்ருதீன் கதைகள்; மொழிபெயர்ப்பு; சஃபி; டிசம்பர் 2009, உயிர்மை பதிப்பகம்; பக் 191 - 192.





Thursday, January 22, 2015

Monday, November 24, 2014

பேச்சு Vs செயல்



                                           'ACTION' always speaks louder than 'WORDS' 

Sunday, September 7, 2014

பக்குவம்


ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுத்துவதும் இல்லை.தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள்.மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.

நன்றி: தென்றல்

Friday, July 25, 2014

நில்; கவனி; முன்னேறு!





* எந்தச் செயலையும் தன் முனைப்போடு செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வேண்டாம்.

* மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராய் இருங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

* தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். மாறாகச் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.

* நிதானமாய் செயல்படுங்கள். அவசரம், ரென்ஷன் முதலியவைகளை அறவே தவிர்த்து விடுங்கள்.

* சுய ஒழுக்கத்தை உங்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

* உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துச் செயற்படுங்கள். காக்காய் பிடிப்பது, ஜல்ரா தட்டுவது போன்றவைகளை அறவே தவிருங்கள்.

* மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவராக இருங்கள்.மாறாக பொறாமைப்படுபவராக இருக்க வேண்டாம்.

* உங்களின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் மற்றவர்களிடம் உங்களின் நம்பகத்தன்மையை அதிகரியுங்கள்.

* எத்தனை வேலைகலை முடிக்கிறோம் என்பதல்ல முக்கியம். எத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் முடிக்கிறோம் என்பதே முக்கியம்.

* உங்களின் செயல்பாட்டினால்; வேலையைச் செய்து முடிக்கும் தன்மையினால் மற்ரவர்களைக் கவர முயற்சி செய்யுங்கள். மாறாக உங்கள் சாதுரியமான பேச்சினால் அல்ல.

* உங்கள் திறமையில் நம்பிக்கை உடையவராய் இருங்கள். மாறாக கர்வமோ தலைக்கனமோ கொள்ள வேண்டாம்.

* அன்றய வேலையை அன்றே செய்து முடிக்கப் பழகுங்கள். நாளைக்கு என்று தள்ளிப் போட வேண்டாம்.

* எடுத்துக் கொண்ட வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். ஏனோ தானோ என்று கடமைக்காகச் செய்து முடிக்க வேண்டாம்.

* கூட்டுகிற வேலையாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

* உங்கள் வேலை நீங்கள் முன்னுக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம்.அதில் முறையாகச் செயற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

தினமுரசு: டிச 24 - 30, 2000.