Thursday, January 22, 2015
Tuesday, December 23, 2014
Monday, November 24, 2014
Sunday, September 7, 2014
பக்குவம்
ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுத்துவதும் இல்லை.தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள்.மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.
நன்றி: தென்றல்
Friday, July 25, 2014
நில்; கவனி; முன்னேறு!
* எந்தச் செயலையும் தன் முனைப்போடு செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வேண்டாம்.
* மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராய் இருங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.
* தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். மாறாகச் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.
* நிதானமாய் செயல்படுங்கள். அவசரம், ரென்ஷன் முதலியவைகளை அறவே தவிர்த்து விடுங்கள்.
* சுய ஒழுக்கத்தை உங்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.
* உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துச் செயற்படுங்கள். காக்காய் பிடிப்பது, ஜல்ரா தட்டுவது போன்றவைகளை அறவே தவிருங்கள்.
* மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவராக இருங்கள்.மாறாக பொறாமைப்படுபவராக இருக்க வேண்டாம்.
* உங்களின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் மற்றவர்களிடம் உங்களின் நம்பகத்தன்மையை அதிகரியுங்கள்.
* எத்தனை வேலைகலை முடிக்கிறோம் என்பதல்ல முக்கியம். எத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் முடிக்கிறோம் என்பதே முக்கியம்.
* உங்களின் செயல்பாட்டினால்; வேலையைச் செய்து முடிக்கும் தன்மையினால் மற்ரவர்களைக் கவர முயற்சி செய்யுங்கள். மாறாக உங்கள் சாதுரியமான பேச்சினால் அல்ல.
* உங்கள் திறமையில் நம்பிக்கை உடையவராய் இருங்கள். மாறாக கர்வமோ தலைக்கனமோ கொள்ள வேண்டாம்.
* அன்றய வேலையை அன்றே செய்து முடிக்கப் பழகுங்கள். நாளைக்கு என்று தள்ளிப் போட வேண்டாம்.
* எடுத்துக் கொண்ட வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். ஏனோ தானோ என்று கடமைக்காகச் செய்து முடிக்க வேண்டாம்.
* கூட்டுகிற வேலையாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.
* உங்கள் வேலை நீங்கள் முன்னுக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம்.அதில் முறையாகச் செயற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
தினமுரசு: டிச 24 - 30, 2000.
Friday, July 4, 2014
Sunday, May 18, 2014
Subscribe to:
Posts (Atom)





