
* தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.
*பிறர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.
* மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.அதனால் விவாதத்தின் பின் யார் மூடன் என்பது விளங்காமலே போய் விடும்.
* மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் உன் செவியை அடைத்துக் கொள்.
* நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் நாம் வருந்த வேண்டியதில்லை.ஏனெனில், அது நமக்கு வேண்டாததாகக் கூட இருக்கலாம்.
* ஒருவரின் அவல நிலையைப் பார்த்துச் சிரிக்கும் போது நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.
* வீணான எண்ணங்கள் நச்சுக் கிருமிகள்.உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.
* துயரங்களை எதிர் பார்ப்பவன் இரு முறை துயரம் அடைகிறான்.
நன்றி; பரிசு - சிறுவர் பத்திரிகை. ஏப்ரல் 2010