
சாகப் போகிறவனுக்கு யார் நண்பன்?
தானம்.அது தான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிருடன் கூடப் போகும்.
எது சுகம்?
நல்லொழுக்கம்.
எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?
ஆசை.
உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்குப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சியுள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருப்பார்கள் என்று எண்ணுவதே பெரிய ஆச்சரியம்.
எது மனிதனைப் பாதுகாக்கிறது?
செய்த தர்மமே மனிதனைப் பாது காக்கிறது.
- பாரதத்தில் தர்ம தேவதை யக்ஷனாக வந்து தர்மரிடம் கேள்வி கேட்ட போது-