
எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும் அதை உங்களிடம் திருத்திக் கொள்ளுங்கள்.
நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பாண்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிட்டும்.
மற்றவர்களுடைய தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டு திரியாதே! அதை அவர்களிடமே விட்டு விடு.
மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்,நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான் பேரமைதி கிடைக்கிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.
செய்தவரைப் பார்க்காது அவரது செயலை மட்டுமே சீர் தூக்கிப் பார்.
புற விடயங்கள் பிரச்சினையல்ல.அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளே பிரச்சினை.
அதிர்ப்திக்கெல்லாம் காரணம் சுயநலமே!
இது நல்லது;இது கெட்டது என்று அவசர தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே!