Thursday, September 28, 2023

நினைப்பும் நிகழ்வும்

 


                                                          Where focus goes Energy flows

Wednesday, January 11, 2023

பொன்மொழிகள்

 உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்.

உங்கள் பின்னால் பேசுபவரைக் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் வாழ்வது அல்லாவுக்காகத் தான். அடுத்தவருக்காக அல்ல!  - நபிகள் -

வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் எப்படி வாழ்வது என்பதே.

பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகம் தங்கி விடாமல் பார்த்துக் கொள்.

உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்.

ஏளனம் என்பது கீழ் மக்களின் மனங்களில் ஏற்படும் நச்சுப் புகை.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பாகும்.

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்தில் இருந்து மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.

-படித்ததில் பிடித்தது - 

Monday, May 2, 2022

உங்களைக் கேளுங்கள்

 


உங்களிடம் கேளுங்கள்; நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?

                                              - Dr.அப்துல்கலாம்.-

Friday, October 8, 2021

இரு பலவீனங்கள்


 நீங்கள் பலவீனமானவர் என்பதற்கு இரண்டு அடையாளங்கள் உண்டு.

1. பேசவேண்டிய நேரத்தில் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2. வாயை மூடிக் கொண்டிருக்கவேண்டிய நேரத்தில் பேசுவது.

                                                         - பாரசீகப் பழமொழி - 

Sunday, September 5, 2021

எண்ணங்கள்

 



What we think, we become. – Buddha

நாம் எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம். – புத்தர் -


Friday, July 16, 2021

சந்தோஷம் என்பது.....


 'உங்கள் கணவர் உங்களைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்கிறாரா?’ - சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

அருகில் இருந்த கணவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். காரணம் மனைவி அவரிடம் எந்த விதமான புகார்களும் சொன்னதில்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.

ஆனால், அந்த மனைவி தெளிவாக, ’ இல்லை, கணவர் என்னைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. என்னைச் சந்தோஷப் படுத்தியதுமில்லை; ஆனால் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது அல்ல; அது என்னைச் சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப் பட்ட விஷயம்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பதென்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்னென்ன தருணங்களில் தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால் நான் பெரும் பிரச்சினையில் இருக்கிறேன் என்று பொருள்.

நம்மைச் சுற்ரியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.... அது ஒரு நீண்ட பட்டியல்.

‘என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பதென்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ குறைவாக இருந்தாலோ சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ பணக்காறியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.

‘திருமணத்திற்கு முன்னும் நான் சந்தோஷமாக இருந்தேன். பின்னும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நல்ல அபிப்பிராயம் இருப்பதால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையை நான் விரும்பக் காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமாக இருப்பதால் அல்ல; நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்குப் பொறுப்பு.

இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும் போது, என்னைச் சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் இருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால் தான் எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது’ என்றார்.

நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு உரியது. அது மழை வெய்யிலிலோ, உடல்நலமின்மையிலோ, பணத்திலோ மற்றவரிலோ தங்கி இல்லை.

.நம்  சந்தோஷம் நம் வசமே உள்ளது.

( சிட்னியில் கொரோனா பேரிடர் அதிகரித்துக் கொண்டும் போகும் இத் தறுவாயில்; எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கப் பணிக்கப் பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் வட்ஸப் பில் வந்த இந்தப்பதிவை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

Stay home.  Be safe!