Monday, April 2, 2018

எது அழகு



எது அழகு?

சிவந்த நிறமா?வேல் போன்ற விழியா?  கூரான மூக்கா? வனப்பான உடல் அமைப்பா? வண்ண உடைகளா? வித விதமான சிகை அலங்காரங்களா? உயர் விலை நகை அலங்காரங்களா?

 இவை எல்லாம் அழகு தான். ஆனால் இவை மட்டும் அழகல்ல.

குழந்தைகளை அன்போடும் பண்போடும் அரவனைத்து வளர்க்கும் பெற்றோர் அழகு! அப் பெற்றோரை வயதான காலத்தில் பேணி வளர்க்கும் பிள்ளைகள் அழகு! மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு. கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு! பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு! நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு! செய்யும் தொழிலை மிகத் திறமையுடன் செய்பவர் அழகு!
தொழிலில் அறத்தையும் நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர் அழகு! கையூட்டு வாங்க கைக்குச் சொந்தக்காரர் அழகு! பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு! பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்காரர் அழகு! பிறர் துன்பப்பட்டால் கலங்கும் கண்கள் அழகு!அத் துன்பத்தைக் களைத்திட நீளும் கைகள் அழகு! சமூக மேம்பாட்டுக்காக உழைக்கும் யாவரும் அழகு! பணிவாக இருக்கும் பண்பாளர்அழகு! மலர்ந்த முகமும் இனிய சொல்லும் கொண்ட மாந்தர் எப்போதும் அழகு!

இதன்படி வாழும் மனிதரா நீவீர்? உணர்ந்து கொள்ளும் நீவீர் தான் உண்மையில் அழகு!

( whatapp இல் வந்த செய்தி )

2 comments:

Yarlpavanan said...

இத்தனை அழகா
அத்தனையும் தம் செயலாகக் கொண்ட
நம்மாளுங்க அழகு

யசோதா.பத்மநாதன் said...

ஆமா....:)