Friday, July 25, 2014

நில்; கவனி; முன்னேறு!





* எந்தச் செயலையும் தன் முனைப்போடு செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வேண்டாம்.

* மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராய் இருங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

* தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். மாறாகச் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.

* நிதானமாய் செயல்படுங்கள். அவசரம், ரென்ஷன் முதலியவைகளை அறவே தவிர்த்து விடுங்கள்.

* சுய ஒழுக்கத்தை உங்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

* உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துச் செயற்படுங்கள். காக்காய் பிடிப்பது, ஜல்ரா தட்டுவது போன்றவைகளை அறவே தவிருங்கள்.

* மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவராக இருங்கள்.மாறாக பொறாமைப்படுபவராக இருக்க வேண்டாம்.

* உங்களின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் மற்றவர்களிடம் உங்களின் நம்பகத்தன்மையை அதிகரியுங்கள்.

* எத்தனை வேலைகலை முடிக்கிறோம் என்பதல்ல முக்கியம். எத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் முடிக்கிறோம் என்பதே முக்கியம்.

* உங்களின் செயல்பாட்டினால்; வேலையைச் செய்து முடிக்கும் தன்மையினால் மற்ரவர்களைக் கவர முயற்சி செய்யுங்கள். மாறாக உங்கள் சாதுரியமான பேச்சினால் அல்ல.

* உங்கள் திறமையில் நம்பிக்கை உடையவராய் இருங்கள். மாறாக கர்வமோ தலைக்கனமோ கொள்ள வேண்டாம்.

* அன்றய வேலையை அன்றே செய்து முடிக்கப் பழகுங்கள். நாளைக்கு என்று தள்ளிப் போட வேண்டாம்.

* எடுத்துக் கொண்ட வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். ஏனோ தானோ என்று கடமைக்காகச் செய்து முடிக்க வேண்டாம்.

* கூட்டுகிற வேலையாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

* உங்கள் வேலை நீங்கள் முன்னுக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம்.அதில் முறையாகச் செயற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

தினமுரசு: டிச 24 - 30, 2000.




4 comments:

நிலாமகள் said...

நல்ல வழிகாட்டி! ஒரு பதிவில் அடங்கி விட்ட வாழ்வு. நன்றி தோழி.

"கூட்டி குப்பை அள்ளும் வேலையையும் 'இதை விட சிறப்பாக செய்ய முடியாது' என்னுமளவு செய்யணும்"

என சிறுவயதில் அறிவுறுத்திய என் தந்தை, நினைவில் ...

யசோதா.பத்மநாதன் said...

மிக்க மகிழ்ச்சி நிலா.

எங்கே கன நாளைக்குப் பிறகு? பல நாட்களாய் ஆளையே காணோம்?

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அதே வசனம் என்னை இன்றும் முன் தள்ளிக் கொண்டே இருக்கிறது.

இந்த பத்திரிகைத் துண்டை என் வேலை லொக்கரின் உள்கதவில் ஒட்டி வைத்திருக்கிறேன்.

ஒரே கருத்தால் இணைகின்ற போது அதன் சுகமே தனி!

நன்றி நிலா!!

நிலாமகள் said...

ஒரே கருத்தால் இணைகின்ற போது அதன் சுகமே தனி!//

:))

யசோதா.பத்மநாதன் said...

ஓம் நிலா!
:)