Wednesday, April 3, 2013

நமக்கான கேள்விகள்

1. என் தேவை என்ன என்பதை எப்படித் தீர்மானிக்கிறேன்? மற்றவர்களிடம் இருப்பதை வைத்தா? எனக்குத் தேவை என்ற அடிப்படையிலா?

2.என் அன்றாடத் தேவைகளுக்கு நான் யார் யாரைச் சார்ந்திருக்கிறேன்?

3 தினமும் என்னைச் சார்ந்து  (என் பணியை) நேரடியாகவும் மறைமுகமாகவும்   யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமா?

4.ஊதியம் பெறாமல் அன்பினால் என் தேவைகளை அளித்து வருபவர்கள் யார் யார்?

5.ஊதியம் பெறாமல் அன்பின் காரணமாக நான் யார் யாருக்கு உதவியாக இருக்கிறேன்?

- கேள்விகள் நமக்கானவை. விடைகளும் நமக்குரியவை -

நன்றி: ஞாநி.ஆ.வி.12.9.07.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விடையை தேர்ந்தெடுப்பதும் நம் திறமை...

நிலாமகள் said...

இந்த கேள்விகளும் அதற்கான விடைகளும் நல்லதொரு தெளிவையும் நிறைவையும் தரும்.

யசோதா.பத்மநாதன் said...

இக்கேள்விகள் மனதின் இருண்ட பக்கங்களுக்கு ஒளிபாய்ச்ச வல்லவையும் கூட இல்லையா?

பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு நன்றி தனபாலருக்கும் நிலாமகளுக்கும்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

உள்ளக் கமலம் ஓங்கி மணம்வீச
அள்ளித் தொடுத்த அருங்கேள்வி! - தெள்ளிய
நீரோடை போல்ஓடும்! நெஞ்சம் உணா்ந்திட்டால்
சீரோடை ஓங்கும் செழித்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

யசோதா.பத்மநாதன் said...

வணக்கம் கவிஞரே!

அன்பார்ந்த வரவுக்கும் அழகிய ஆசுகவிக்கும் என் அன்பு நன்றி.

மகிழ்வில் திளைக்கிறது உள்ளம்!