Tuesday, May 31, 2011

பெற்றோர்களுக்கு,




பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்லர்;
அவர்கள்
உங்களிடம் இருந்து வரவில்லை.
உங்கள் வழியாக வருகிறார்கள்.
..........

- கலீல் ஜிப்ரான்.

9 comments:

நிலாமகள் said...

கிப்ரானின் அற்புத‌ வ‌ரிக‌ளை த‌ந்த‌மைக்கு ந‌ன்றி தோழி. ஒவ்வொரு பெற்றோரும் த‌ம் ஆதிக்க‌த்தையும் அபிலாஷைக‌ளையும் பிள்ளைக‌ள் மேல் சும‌த்துமுன் நிதானித்து யோசிக்க‌ வைக்கும் வ‌ரிக‌ள‌ல்ல‌வா... ச‌ம‌யாச‌ம‌ய‌ங்க‌ளில் உண‌ர்வ‌ய‌ப்ப‌டும் ம‌ன‌சை அட‌க்கி எம்மை அறிவுவ‌ய‌ப்ப‌ட‌ வைப்ப‌தில் இவ்வ‌ரிக‌ள் கைதேர்ந்த‌வை.

யசோதா.பத்மநாதன் said...

உண்மை தான் தோழி.சில சொற் கோர்வைகளுக்கு அத்தகைய பலம் உண்டு.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

யசோதா.பத்மநாதன் said...

மருந்து தருமளவு பாண்டித்தியம் என்னிடம் இல்லைத் தோழி.

மனவலி என்னவென்றும் குறிப்பாகத் தெரியவில்லை.

ஆனாலும்,தன்னையறிதல்,தன்னை மட்டும் நம்புதல்,சுயமரியாதை,’எல்லாம் நன்மைக்கே’என்பதன் தாற்பரியத்தை அறிதல்,காலத்தின் மீதான நம்பிக்கை, மேலும் சாபத்தை வரமாக மாற்றும் உத்தியை அறிதல்....இப்படிக் கொஞ்சத்தை யோசித்துப் பார்க்கலாம்.

சவால்களைச் சந்திக்கும் போது நான் சிந்திக்கும் விதம் இது.

இராஜராஜேஸ்வரி said...

அற்புதவரிகள். பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்ல்ம் நினைவு கொண்டு சுதாரித்துக்கொள்ள வேண்டும்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சந்திர வம்சம் said...

மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
தன்னையறிதல்,தன்னை மட்டும் நம்புதல்,சுயமரியாதை,’எல்லாம் நன்மைக்கே’என்பதன் தாற்பரியத்தை அறிதல்,காலத்தின் மீதான நம்பிக்கை, மேலும் சாபத்தை வரமாக மாற்றும் உத்தியை அறிதல்....இப்படிக் கொஞ்சத்தை யோசித்துப் பார்க்கலாம்.

நன்று. அருமையான கருத்தினைக் கூறினீர்கள். மனவலியில் உழல்பவர்கள் அனைவர்க்கும் ஏற்புடைய கருத்து..பத்மாசூரி.

யசோதா.பத்மநாதன் said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அன்பும் ராஜராஜேஸ்வரிக்கும் சந்திரவம்சத்திற்கும் உரியதாகட்டும்.

உங்கள் இருவரின் வரவும் பதிவும் மனதுக்கு இதமானது.

தொடர்ந்து வருக தோழர்களே!

மாய உலகம் said...

உண்மை..
இந்த ஜென்மத்தில் ஒரு தாயின் வயிற்றில் அடுத்த ஜென்மத்தில் வேறு ஒரு தாய் வயிற்றில் ஆத்மா திணிக்கப்படுகிறது... எண்ணிப்பார்த்தால் அனைவரும் மறைமுக உறவுகளே...

யசோதா.பத்மநாதன் said...

ஆத்ம ஞானத்தை - அந்த எளிமையான உண்மையை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

அந்த உண்மையைக் கண்டுகொண்டாலே வாழ்க்கைப் பயணம் அதற்குரிய இயல்போடு அமைதியாய்ப் பயணிக்கும் இல்லையா?

அப்படியானவர்களைக் கண்டு கொள்ளுதலும் மகிழ்ச்சி தருவதே.

உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் என் அன்பும் நன்றியும்.