Monday, February 21, 2011

மனதின் படிக்கட்டுக்கள்



’மனித தேவைகளே அவனின் நடத்தையைத் தீர்மானிக்கின்றன’ என்கிறார் maslow என்ற மேலைத் தேய உளவியலாளர்.முதலில் வருவன அவனின் அடிப்படைத் தேவைகள். அது பூர்த்தியாகும் பட்சத்தில் அவனது தேவைகள் அடுத்த கட்டமான பாதுகாப்பு, நின்மதி போன்றவற்றை நாடுகின்றது.அதற்கடுத்ததாக அன்பு,உறவு,குடும்பம்,நட்பு போன்றவற்றை மனம் இயல்பாக நாடுகின்றது.

இவ்வாறே ஒவ்வொன்றும் பூர்த்தியாகுமிடத்து அடுத்த கட்டத்தை நோக்கி மனம் நகர்கிறது.இறுதியில் அது உயர்வான மனநிறைவில் வாழ்வைப் பூரணப் படுத்துகிறது.அது நிறைவேறும் வரை மனம் ஓடிக் கொண்டே இருக்கும்.போராட்டமும் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கும் என்கிறது உளவியல்.

ஒரு மனிதன் எந்தப் படிநிலையில் இருக்கிறானோ அந்தத் தேவைகளை மையமாக வைத்து அவனது வேட்கைகள்,
விருப்புவெறுப்புகள்,தொடர்புகள்,நடைமுறைகள்,சிந்தனைகள்,கருத்துலகம்,பார்வை,நோக்கம்,திருப்தி முதலியன அமைகின்றன.

நீங்கள் எந்தக் கட்டத்தில் இப்போது நிற்கிறீர்கள்?



\-------------------------------7.உயர் திறன்,மனநிறைவு,
\-----------------------------6.ரசனை,கலையாக்கம்,அழகுணர்ச்சி
\--------------------------5.அறிவாற்றல்,தெளிதல்,ஞானம்
\------------------------4.மானம்,கெளரவம்,மதிப்பு
\----------------------3.அன்பு,உறவு,
\------------------- 2.பாதுகாப்பு,நின்மதி
\-----------------1.உடலியற் தேவைகள்,உணவு,உடை,வீடு,



மேலே உள்ளவை நம்முடைய படிநிலைத் தேவைகள்.



நம்மைச் சுற்றி உள்ள விரிவடையும் வட்டங்கள் கீழே உள்ளவை.


1.அகங்காரம்.
|
2.குடும்பம்.
|
3.கூட்டுக் குடும்பம்.
|
4.சாதி,குலம்.
|
5.பிரதேசம்.
|
6.இனம்,கலாசாரம்.
|
7.தேசம்.
|
8.மதம்.
|
9.மானுடம்.
|
10.பரமாத்மா.


நன்றி;பேராசிரியர். தயா.சோமசுந்தரம்.’தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன்’,தலைவர்,உளமருத்துவத்துறை,யாழ்.பல்கலைக்கழகம்.1994.

Monday, February 7, 2011

நோபல் பரிசின் பின்னே...


மார்கழி மாதம் பத்தாம் திகதி நோபல் சமாதானப் பரிசு வழங்கப் படும் போது எல்லோருக்கும் அதன் ஸ்தாபகர் அல்பேட் நோபலின் பெயர் தான் ஞாபகம் வரும்.ஆனால் அவருக்குப் பின்னே ஒரு பெண்மணி இருந்தாள்.

பெர்த்தா. ஸ்டெட்னர் என்ற அந்தப் பெண் வெடி மருந்துத் தயாரிப்பாளரான நோபலின் கீழே வேலை பார்த்தாள்.பின்னர் ரஷ்யாவில் தன் கணவருடன் தங்கியிருந்த போது துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்த போரின் கொடுமையைக் கண்ணால் கண்டார்.சமாதான இயக்கங்களில் ஈடு பட்டு நோபலையும் ஈடுபாடு கொள்ளச் செய்தார்.பெரும் ஆராய்ச்சிகள் செய்து ‘லே டவுன் யுவர் ஆர்ம்ஸ்’(உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்)என்ற நாவலை எழுதினார்.போரின் கொடுமைகளை விபரித்த அந்த நாவல் நோபலை மிகவும் கவர்ந்தது.

இருபது ஆண்டுக் காலம் பெர்த்தாவோடு சகோதர நண்பரைப் போலp பழகிய நோபல் தான் இறக்கின்ற போது சமாதானத்துக்கான நோபல் பரிசை ஏற்படுத்தினார்.

(நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்,ரா.கி.ரங்கராஜன்).