Saturday, July 17, 2010

சில துளிகள்



*வெற்றி தலைக்கும் தோல்வி இதயத்திற்கும் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.

*மனிதன் பிறந்தது வெற்றியடையவே; தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கவல்ல.

*துரதிஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்.நல்லதிஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.

*ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.வீழ்ச்சியடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.

*நான் சோம்பேறி என்பதைத் தான் சிலர் நாசுக்காக எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்கிறார்கள்.

*ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டுபிடிக்கிறாய்.செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.

*திறமை ஒருவனை மேலே கொண்டு போகும்.நல்ல குணம் தான் அவனைக் கீழே விழாமல் பாதுகாக்கும்.

நன்றி;பரிசு சிறுவர் பத்திரிகை;மே 09 - 23,2010 மற்றும் ஜூன் 13 - 27,2010

1 comment:

நிலாமகள் said...

பெரியோர்க்குமானவை இப் பொன்மொழிகள்! எல்லாமே நன்று!!