Saturday, January 16, 2010
அரசனும் ஆண்டியும்
மன்னனுக்குச் சமனான செல்வம் கொண்டவரான திருவெண்காடர் அனைத்தையும் துறந்து கோவணத்தோடு கிளம்பி விட்டார்.மக்கள் அவரைப் பட்டிணத்தார் என்று போற்றினர்.
அதை அறிந்த மன்னன் வியந்தான்.
எல்லாச் செல்வங்களுடனும் நான் வந்திருக்கிறேன்.செல்வங்களைத் துறந்ததால் நீர் என்ன பெற்றீர்?
பட்டிணத்தார் அமைதியாகச் சொன்னார்.'நான் இருக்க நீர் நிற்க'
பொதுவாக மன்னரைப் பார்த்தவுடன் அனைவரும் எழுந்து வணங்குதல் தான் முறை.இங்கோ மன்னன் எதிரே வந்து நிற்கிறான்.பட்டிணத்தார் எழவில்லை; வணங்கவில்லை.
தேவைகளைக் கடந்தவன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான்.அதனால் தான் நான் அமர்ந்திருக்கிறேன்.என் முன் நீ நின்று கொண்டிருக்கிறாய். என்றார் பட்டிணத்தார்.
***************************************
"நம்முடய செயல்களே பிற்காலத்தில் நமக்கான அடையாளங்கள்.தோற்றமல்ல"
-தென்றல்- ஜனவரி, 2010.(முதலாவது இதழ்)
Tuesday, January 12, 2010
Subscribe to:
Posts (Atom)