Saturday, November 28, 2009

கேள்வி பதில்


வாழ்க்கைக்கான கல்வி வகுப்பறைகளுக்கு வெளியே தான் இருக்கிறது என்பார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருந்தும் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

ஒவ்வொரு அனுபவத்தின் பின்னாலும் நமக்கான பாடம் ஒன்று அங்கு மறைந்திருக்கிறது.

இந்த உலகில் பிறந்திருக்கிற சகல மனித உயிர்களுக்கும் சூழல்களை, சமூகத்தை,பிறப்பிடத்தை,பரம்பரை அலகுகளை நிபந்தனையாகக் கொண்டு வெற்றுத் தாள்களும் பேனாவும் தரப்பட்டிருக்கின்றது.நம் வாழ்க்கையை காலப் பேனாவால் நம் மனதில் எழுதிச் செல்கிறோம்.எங்கள் வாழ்க்கையை நாங்கள் எழுதி இருக்கிறோம்.

இவை தான் கேள்விகள்.எங்கே இப்போது இவற்றுக்கான பதில்களை நீங்கள் உங்களுக்கு எழுதிக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கை என்னவென்று புரிந்து விடும்.என்ன செய்ய வேண்டும் என்பதும் புரிந்து விடும்.


ஒரு விரிவுரை மண்டபத்தில் கேட்கப் பட்ட கேள்விகள் இவை.

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு எழுதி உள்ளீர்கள்?

2. அந்தக் கதைக்குரிய தலைப்பு என்ன?

3. எப்படியான கதை அது?

4.சந்தித்த திருப்பு முனைகள் என்ன? அதனை எப்படிச் சமாளித்தீர்கள்? அதாவது எங்கள் வீர வரலாறு:-)

5.உங்கள் வாழ்வில் நீங்கள் கற்றுக் கொண்ட அனுபவம்/பொன்மொழி என்ன?