Wednesday, April 1, 2009

கதம்ப மலர்கள்

* தன்னை உணர்ந்து கொண்டவன் மற்றவர்களுடன் பேசுவதையும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் தவிர்த்துத் தன்னைப் பார்க்கத் தொடங்க வேண்டும்.தனக்குத் தானே நீதிபதியாகித் தன்னுடய சரி,பிழைகளை அலசி தன்னைப் புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னோடு பேசித், தன் பிழைகளைத் தட்டிக் கேட்டு, தனக்குத் தானே எஜமானனாக வேண்டும். -யாரோ-

* துக்கமும் சந்தோஷமும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை.நீ யார் பேரிலும் கோபிக்காதே! பிறருடய குண தோஷம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது.
- கிருபாச்சாரியார் தன் மகள் தேவயானிக்குக் கூறியது.-

* உடலைப் பிரிந்த ஆத்மாவுக்கு அண்ணன், தம்பி, பந்துக்கள் என்ற பரஸ்பர சம்பந்தம் ஒன்றுமில்லை.உம்முடய மக்கள் உண்மையில் உமக்குச் சம்பந்தப் பட்டவர்கள் அல்லர்.தேக சம்பந்தம் மரணத்தோடு முடிந்து போகிறது.

* ஆத்மாவோடு கூட வருவது செய்த தர்மம், நல்வினை, தீவினை இவையே.

*அறிவு நிறைந்தவனும், புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் காண்பவனும்,மான அவமானத்தால் மாறுபாடு அடையாமல் இருப்பவனும்,நண்பனையும் எதிரியையும் ஒன்றுபோல் நடத்துபவனும், எல்லாவிதமான பலன் நோக்கு செயல்களையும் துறந்தவனுமான ஒரு மனிதன் இயற்கைக் குணங்களில் இருந்தும் உயர்ந்தவனாவான்.

* மனதால் எல்லா செயல்களையும் துறந்து விடும் போது 9 கதவுகள் கொண்ட நகரில் செய்யாமலும் செயற்காரணமாகாமலும் ஆத்மன் இன்பமாய் வசிக்கிறான்.

* பெரியவர்களை வணங்குவது, தூய்மை, எளிமை,சிற்றின்பத்துறவு, தீங்கு செய்யாது இருத்தல், இவை உடலால் செய்யும் தவமாகும்.

உண்மையாகவும் நன்மையளிக்கும் படியாகவும், மனதை நோகச் செய்யாத முறையிலும் பேசப் படும் பேச்சு வாக்குத் தவமாகும்.

சாந்தம்,எளிமை,கம்பீரம், சுய கட்டுப் பாடு,எண்ணத் தூய்மை இவை மனதின் தவமாகும்.
-பகவத் கீதை-



*