Thursday, January 1, 2009

கமலம் ஒன்று

நல்லெண்ணம்,சகிப்புத்தன்மை,மன்னித்தல்,மற்றும் அன்பான உபசாரம் ஆகியன அடிப்படையில் அவசியமான விசேட குணங்களாகும்.

நீங்கள் எல்லோராலும் விரும்பப் படுபவர்களாக இருப்பீர்களாக! அப்போது அனைவரின் ஆசிகளுக்கும் உரிமையாளர் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் பேச்சில் ஒரு போதும் கசப்புணர்வு இருக்கக்கூடாது.உங்கள் பேச்சானது ஆத்மாவுக்கு ஆசுவாசத்தையும்,ஆறுதலையும் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.உங்கள் சொற்கள் ரோஜா இதழ்கள் போன்று உதிர வேண்டும்.உங்கள் வாய் மொழியானது பிறரைக் காயப்படுத்தும் கற்களைப் போன்றதாக இருக்கக் கூடாது.

ஒரு போதும் பழி வாங்கும் எண்ணம் கூடாது.மற்றவர் மீது பழி போடாமல்,குறை காணாமல்,குற்றம் சுமத்தாமல்,தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.

எங்கோ, எப்போதோ பார்த்தது.

2 comments:

பழமைபேசி said...

Very nice posts! I guess, I should come here often to keep my self calm....very good and congratulations!

Please remove word verification!!

And I am sorry to comment in English!!!

யசோதா.பத்மநாதன் said...

மிக மகிழ்ச்சி மகன்.அடிக்கடி வந்து போங்கள்.உங்களுக்காக வேனும் இங்கு இனி அடிக்கடி அறிந்ததை, கவர்ந்ததை, முயன்றதை, பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போதே நீங்கள் சொன்ன விடயத்தை செய்து விடுகிறேன்.உங்கள் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.