Thursday, January 22, 2009

எது நிரந்தரம்?


சாகப் போகிறவனுக்கு யார் நண்பன்?
தானம்.அது தான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிருடன் கூடப் போகும்.

எது சுகம்?
நல்லொழுக்கம்.

எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?
ஆசை.

உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்குப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சியுள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருப்பார்கள் என்று எண்ணுவதே பெரிய ஆச்சரியம்.

எது மனிதனைப் பாதுகாக்கிறது?
செய்த தர்மமே மனிதனைப் பாது காக்கிறது.

- பாரதத்தில் தர்ம தேவதை யக்ஷனாக வந்து தர்மரிடம் கேள்வி கேட்ட போது-

Sunday, January 4, 2009

12 நற் பண்புகள்

அகத் தூய்மை,புறச் சுத்தம்

அன்பு,நல்லெண்ணம்

ஒரே சீரானமனநிலை,அமைதி

பொறுமை,நல்லிணக்கம்

மரியாதை,சுயமரியாதை

ஆக்கபூர்வ நோக்கு, சுய கட்டுப்பாடு

நடுவு நிலை,பற்றற்ற நிலை

உண்மை

எளிமை, திருப்தி

நேர்மை,நீதி

உலக சகோதரத்துவம்.

Thursday, January 1, 2009

கமலம் ஒன்று

நல்லெண்ணம்,சகிப்புத்தன்மை,மன்னித்தல்,மற்றும் அன்பான உபசாரம் ஆகியன அடிப்படையில் அவசியமான விசேட குணங்களாகும்.

நீங்கள் எல்லோராலும் விரும்பப் படுபவர்களாக இருப்பீர்களாக! அப்போது அனைவரின் ஆசிகளுக்கும் உரிமையாளர் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் பேச்சில் ஒரு போதும் கசப்புணர்வு இருக்கக்கூடாது.உங்கள் பேச்சானது ஆத்மாவுக்கு ஆசுவாசத்தையும்,ஆறுதலையும் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.உங்கள் சொற்கள் ரோஜா இதழ்கள் போன்று உதிர வேண்டும்.உங்கள் வாய் மொழியானது பிறரைக் காயப்படுத்தும் கற்களைப் போன்றதாக இருக்கக் கூடாது.

ஒரு போதும் பழி வாங்கும் எண்ணம் கூடாது.மற்றவர் மீது பழி போடாமல்,குறை காணாமல்,குற்றம் சுமத்தாமல்,தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.

எங்கோ, எப்போதோ பார்த்தது.